'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா | உண்மையாகவே மது அருந்தினாரா நானி |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் ஜவான் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, நயன்தாரா, யோகி பாபு என பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதே ஸ்டுடியோவில் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதால் ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக்கொண்ட தகவல்கள் நேற்றைய தினம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஜவான் படம் குறித்து இன்னொரு ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில், 200 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாரூக்கான் மோதுவது போன்று ஒரு பிரமாண்ட காட்சியை படமாக்கி இருக்கிறார் அட்லீ. இந்த காட்சியில் சண்டை செய்யும் 200 ஸ்டன்ட் கலைஞர்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள் .