தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் ஜவான் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, நயன்தாரா, யோகி பாபு என பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதே ஸ்டுடியோவில் ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதால் ரஜினியும், ஷாருக்கானும் நேரில் சந்தித்துக்கொண்ட தகவல்கள் நேற்றைய தினம் வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஜவான் படம் குறித்து இன்னொரு ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தின் ஒரு சண்டை காட்சியில், 200 பெண் ஸ்டன்ட் கலைஞர்களுடன் ஷாரூக்கான் மோதுவது போன்று ஒரு பிரமாண்ட காட்சியை படமாக்கி இருக்கிறார் அட்லீ. இந்த காட்சியில் சண்டை செய்யும் 200 ஸ்டன்ட் கலைஞர்களும் மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள் .