நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படங்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன. இதனால் அப்செட்டாகி இருக்கும் அக்சய் குமார் தனது சம்பளத்தை கூட அடுத்தடுத்த படங்களுக்கு குறைத்துக் கொண்டார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் அடுத்ததாக தான் நடித்துள்ள ரக்சா பந்தன் படத்தின் ரிலீஸை ரொம்பவே எதிர்பார்க்கிறார் அக்சய் குமார். அதற்காக இப்போதே இந்தப்படத்தின் புரமோஷனில் இறங்கிவிட்டார். இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் சோசியல் மீடியாவில் உரையாடிய அக்சய் குமாரிடம் ரசிகர் ஒருவர் மலையாளத்தில் நீங்கள் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்
அதற்கு பதிலளித்த அக்சய் குமார், “எனக்கும் மலையாளத்தில் நடிக்க விருப்பம் தான். ஆனால் எனக்கு மலையாளம் பேச வராது என்று கூறியுள்ளார். அதேசமயம் எனக்கு பதிலாக யாரும் டப்பிங் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை என்றும், நானே பேசுவது தான் எனக்கு பிடிக்கும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் தமிழில் ரஜினியுடன் இணைந்து நடித்துவிட்டேன்.. கன்னடத்திலும் நடித்துவிட்டேன். அதேபோல மலையாளத்தில், அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என கூறியுள்ள அக்சய் குமார் தனது விருப்பம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷினிடம் தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மலையாளத்தில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் பிரியதர்ஷன், ஹிந்தியில் அதிகப்படியான படங்களை அக்சய் குமாரை வைத்து தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.