தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
டாப்ஸி நடித்துள்ள இந்திப் படம் துபாரா. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கி உள்ளார். வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் டாப்ஸி கலந்து கொண்டு வருகிறார்.
மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு டாப்ஸி தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்குள்ள போட்டோகிராபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டாப்ஸி "எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு நான் வந்திருக்கிறேன். நான் தாமதாக வந்ததாக எப்படி நீங்கள் கூறலாம்" என்றார். இதனை டாப்ஸி கோபகமாகவும் பேசினார்.
இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு டாப்ஸியும் கோபமாக பதிளித்தார். சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் பேசிய டாப்ஸி "நான் கேமரா முன்னால் நிற்கிறேன். இதுதான் நாளை வெளியில் வரும், கேமராவுக்கு பின்னால் நிற்கும் உங்கள் செயல்பாடு வெளியில் வராது. நீங்களும் கேமராவுக்கு முன்னால் வந்து பேசுங்கள்" என்றார்.
இதற்கிடையில் விழா ஏற்பாட்டாளர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.