என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
டாப்ஸி நடித்துள்ள இந்திப் படம் துபாரா. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கி உள்ளார். வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் டாப்ஸி கலந்து கொண்டு வருகிறார்.
மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு டாப்ஸி தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்குள்ள போட்டோகிராபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டாப்ஸி "எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு நான் வந்திருக்கிறேன். நான் தாமதாக வந்ததாக எப்படி நீங்கள் கூறலாம்" என்றார். இதனை டாப்ஸி கோபகமாகவும் பேசினார்.
இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு டாப்ஸியும் கோபமாக பதிளித்தார். சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் பேசிய டாப்ஸி "நான் கேமரா முன்னால் நிற்கிறேன். இதுதான் நாளை வெளியில் வரும், கேமராவுக்கு பின்னால் நிற்கும் உங்கள் செயல்பாடு வெளியில் வராது. நீங்களும் கேமராவுக்கு முன்னால் வந்து பேசுங்கள்" என்றார்.
இதற்கிடையில் விழா ஏற்பாட்டாளர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.