புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். கங்கனா ரணவத் போன்று பரபரப்பான கருத்துகளை வெளியிடுகிறவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்று தெரிவித்திருந்தார் . இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல போதை வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவரும் இவர்தான். ஆர்யன்கான் நிரபராதி அவருக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கர் திடீரென மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.