நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

பிரபல ஹிந்தி நடிகரான அக்சய் குமாருக்குக் கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் கொரானோவால் பாதிக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக அவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர், “கேன்ஸ் 2022 திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரானோ பாசிட்டிவ் வந்து விட்டது. நான் ஓய்வெடுக்க வேண்டும். அனுராக் தாக்கூர் மற்றும் நமது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். அங்கு இருக்கும் வாய்ப்பைத் தவறிவிடுகிறேன்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அக்சய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.