பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
நடிகர் கமல்ஹாசன் நடிகை சரிகாவை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்களும் தற்போது நடிகைகளாக உள்ளனர். 2004ல் கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்தார் சரிகா. அதன் பின்னரும் சில பாலிவுட் படங்களில் சரிகா நடித்து வந்தார்.
இந்த நிலையில் சரிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‛மாடர்ன் லவ் மும்பை' என்னும் ஆந்தாலஜி படம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடி.,யில் வெளியாகியுள்ள இப்படத்தில் 6 குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துமே விவகாரமான காதல் கதைகளை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில், சரிகா நடித்துள்ள குறும்படத்தில் சரிகாவை, 30 வயதான இளைஞர் காதலிப்பது போல் காட்சியமைப்பு உள்ளது. இதனை அறிந்ததும் இளைஞரை அழைத்து கண்டிப்பது போலவும், ஆனாலும் சரிகா அந்த இளைஞரை ஏக்கத்துடன் பார்ப்பது போலவும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.