சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை பல்லவி டே. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ரேஷம் ஜான்பி , அமி சிராஜிர் பேகம், மன் மானே நா ஆகியவை அவர் நடித்த முக்கியமான தொடர்கள்.
25 வயதான பல்லவி, கோல்கட்டா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வராததால் படப்பிடிப்பு குழுவினர் அவரது வீட்டுக்கு சென்று தேடி உள்ளார். அப்போது அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்லவி தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.