'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆலியா பட். அவர் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகத்தான் நடித்தார் என்றாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இல்லாமல் இருந்தது. மேலும், ஒரு துணை நடிகைக்குரிய கதாபாத்திரத்தையே உருவாக்கி இருந்தார் ராஜமவுலி. இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த ஆலியா பட், 'ஆர்ஆர்ஆர்' படம் சம்பந்தப்பட்ட சில படங்களை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். பின்னர் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு ஆலியா பட் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என ஆலியா சொல்லிவிட்டாராம். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. எனவே, இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஆலியா.