ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
சமீத்தில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் உலக புகழ்பெற்ற இசை கலைஞர்கள் நினைவு கூறப்பட்டார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கரை நினைவு கூறாமல் புறக்கணித்தனர். இதனால் இனி வரும் காலங்களில் ஆஸ்கர், கிராமி போன்ற விருது விழாக்களை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விருதுகள் என்று கூறிக் கொண்டு விழா நடத்துகிறவர்கள் அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக பழம்பெரும் கலைஞர்களை புறக்கணித்து, வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கிறார்கள். அத்தகைய உள்ளூர் விருதுகளுக்கு எதிராக நாம் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
ஆஸ்கர் மற்றும் கிராமி இரண்டு விருது விழாக்களிலும் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர்ஜிக்கு அஞ்சலி செலுத்த தவறிவிட்டனர். நமது ஊடகங்கள் உலகளாவிய விருதுகள் என்று கூறிக்கொள்ளும் இந்த உள்ளூர் நிகழ்வுகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு கங்கனா எழுதியுள்ளார்.