வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
வருமான வரி பாக்கி வைத்திருப்போருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது எனவும், இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள் என்றும் தெரிவித்துள்ளார்.
2001-2002 ம் ஆண்டில் "கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வரிமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சுப்ரீம் கோர்ட்டின் நோட்டீஸ் நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமிதாப், நான் இதனை மோசமான அனுபவமாக கருதவில்லை; லண்டன் போஃபர்ஸ் ஊழல் வழக்கிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் என் நினைவில் உள்ளது; என்னிடம் உண்மை என்ற ஆயுதம் உள்ளது; அதனைக் கொண்டு நான் போராடி வருகிறேன்; நான் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன்; உண்மையின் பக்கம் இருப்பதால் நான் நிச்சயம் வழக்கில் வெற்றி பெறுவேன். வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரி்த்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன் என்றார்.
"ஜாலி எல்எல்பி" படத்தில் அமிதாப் தலைமை நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய நீதித்துறை முறைகளை கிண்டல் செய்வது போன்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை பற்றி கூறிய அமிதாப், இந்த படத்தில் தான் மிகவும் விரும்பி நடித்ததாகவும், இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றி அடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் கடந்த மாதம் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமிதாப், மற்றவர்களை கை நீட்டி குற்றம் சொல்வதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவரும் முதலில் தங்களை தாங்களே ஆய்வு செய்து திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.