அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
நடிகை பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் விராட பர்வம் மற்றும் ஹிந்தியில் மைதான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஹிந்தியில் இவர் நடிக்கும் மைதான் படம் கால்பந்து விளையாட்டு பின்னணியில் அறுபதுகளில் நிகழும் கதை. பிரபல கால்பந்து கோச் சையது அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோச் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக பிரியாமணியும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் கதாபாத்திரம் பற்றி பிரியாமணி கூறும்போது, “படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளேன்.. கதைப்படி அஜய் தேவ்கன் ஆங்கிலத்தை ரொம்பவே நேசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த அளவுக்கு என்றால், கடைக்கு ஷாப்பிங் போகும்போது அம்மாவுக்கும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கிப்ட் பொருட்கள் வாங்கினாலும் மனைவியான எனக்கு ஆங்கில டிக்சனரியை வாங்கி தருவார்.. எதற்காக என நான் கேட்டதற்கு, பிழையில்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக என பதில் கூறுவார். அந்த அளவுக்கு அவர் ஆங்கிலத்தை நேசிப்பவராக நடித்துள்ளார்” என கூறுகிறார் பிரியாமணி.