என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகை பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் விராட பர்வம் மற்றும் ஹிந்தியில் மைதான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஹிந்தியில் இவர் நடிக்கும் மைதான் படம் கால்பந்து விளையாட்டு பின்னணியில் அறுபதுகளில் நிகழும் கதை. பிரபல கால்பந்து கோச் சையது அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோச் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக பிரியாமணியும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் கதாபாத்திரம் பற்றி பிரியாமணி கூறும்போது, “படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளேன்.. கதைப்படி அஜய் தேவ்கன் ஆங்கிலத்தை ரொம்பவே நேசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த அளவுக்கு என்றால், கடைக்கு ஷாப்பிங் போகும்போது அம்மாவுக்கும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கிப்ட் பொருட்கள் வாங்கினாலும் மனைவியான எனக்கு ஆங்கில டிக்சனரியை வாங்கி தருவார்.. எதற்காக என நான் கேட்டதற்கு, பிழையில்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக என பதில் கூறுவார். அந்த அளவுக்கு அவர் ஆங்கிலத்தை நேசிப்பவராக நடித்துள்ளார்” என கூறுகிறார் பிரியாமணி.