‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கடந்த 2016ல் மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமினில் வெளிவந்த திலீப்பிற்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித குடைச்சலும் கொடுக்காமல் அந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடந்தது.
இந்தநிலையில் திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் கேரள போலீசார். இதையடுத்து திலீப் முன்ஜாமினுக்கு விண்ணப்பித்தார். இந்த மனுவை வெள்ளிகிழமை (இன்று) விசாரிக்கும் வரை திலீப்பை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.
இதற்கிடையே ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்ற போலீசார் திலீப்பின் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார் காம்பவுண்ட் சுவரேறி குதித்து திலீப்பின் வீட்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் காத்திருந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக திலீப்பின் காதுகளுக்கு சென்றதும் சிறிது நேரத்தில் திலீப்பின் உறவினர் ஒருவர் வந்து போலீசார் சோதனை செய்வதற்காக வீட்டின் கதவை திறந்து விட்டாராம்.