சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மறைந்த நடிகர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த் பாபு. இவரும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ஆனந்த் பாபுவின் மகன்களும் சினிமாவில் களம் இறங்கியுள்ளனர். ஆனந்த் பாபுவின் மகன்களில் ஒருவரான கஜேஷ் ஏற்கனவே கல்கண்டு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது அவரின் மூத்த மகன் பிஜேஷூம் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். நாகேஷ் நடித்த 'எவர்கிரீன்' படமான ''சர்வர் சுந்தரம்'' படத்தின் தலைப்பில் இப்போது ஒரு படம் உருவாகிறது. இதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, பிஜேஷ் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இதுகுறித்து பிஜேஷ் நமது இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
நான் ப்ளஸ் 2 மட்டுமே படித்துள்ளேன். சென்னை, லயோலா கல்லூரியில் பிஎஸ்சி., படிப்பை பாதியிலே விட்டுவிட்டேன். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கை. என் அப்பாவிற்கு நான் தான் மூத்த மகன். அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஹாரி பாட்டர் போன்ற கதைகளை எழுதுவது என்னுடைய ஸ்பெஷல்.
'சர்வர் சுந்தரம்' என்ற பெயரில் தற்போது ஒரு படம் உருவாக உள்ளதையும், அதில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதையும், இன்னொரு ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இயக்குநர் ஆனந்த் ஒரு நடிகர் தேடி வருவதை பற்றிய செய்தியை கேள்விப்பட்டேன். என் தாத்தா படம் என்பதால் இதில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் எனது பெயர் ராஜபாண்டி. இப்போது உருவாகும் சர்வர் சுந்தரத்திற்கும், என் தாத்தா படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சாப்பாடு என்ற ஒரு விஷயம் தான் கையில் எடுத்துள்ளார்கள். மற்றபடி கேட்டரிங் மாணவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக இது இருக்கும்.
என்னை, தாத்தா மாதிரி இருப்பதாக அனைவரும் சொல்வார்கள். உனக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கிறது, சினிமாவுக்கு போ... நன்றாக வருவாய் என்று பலரும் நீண்ட நாட்களாக சொல்லி வந்தனர். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பை பெற்றுள்ளேன். தாத்தா மாதிரி எல்லாம் என்னால் நடிக்க முடியாது. அவருடைய பேரன் என்கிற பெயரை மட்டும் தான் நான் பயன்படுத்தியுள்ளேன். தாத்தா வித்தியாசமான கேரக்டரில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரை மாதிரி வர முடியவில்லை என்றாலும் நாகேஷின் பேரன் என்ற பெயரை காப்பாற்றுவேன்.
நான் சினிமாவுக்கு வர வேண்டும் என்று தாத்தா ஆசைப்பட்டார். அவரது ஆசை இந்தப்படம் மூலம் நிறைவேறும் என நினைக்கிறேன். தாத்தாவின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு. அதை நான் சரியாக பயன்படுத்தி கொள்வேன். சினிமாவில் ஏதோ வந்தோம், போனோம் என்று இல்லாமல் சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இன்றைக்கு சினிமாவில் நடிகர்கள் இடையே போட்டி அதிகம். அவர்களுடன் நான் போட்டி போட முடியுமா என்று தெரியவில்லை. ஆகையால் எனக்கு நானே போட்டியாக எடுத்து கொண்டேன். என்னால் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்வேன்.
தாத்தாவின் 'எதிர்நீச்சல்' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை யாராவது இப்போது எடுத்தால் அதில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். தமிழ் சினிமாவில் கமல் மாதிரி இயல்பான நடிப்பை கொடுக்க முடியாது, அவரை பாலோ செய்யணும் என நினைக்கிறேன்.
என் தம்பி கஜேஷ், 'கல்கண்டு' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப்படம் அவருக்கு சரியாக போகாதது கொஞ்சம் வருத்தம் தான். அவர் அடுத்தப்படத்திற்கு இப்போது தயாராகி வருகிறார்.
ஒரு பக்கம் புத்தகம் எழுதினாலும், நடிப்பை தொடர எண்ணியுள்ளேன். தாத்தா பெயர் சொல்கிற மாதிரி, எதிர்காலத்தில் என் பெயரும், என் படங்களும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முடித்தார் பிஜேஷ்.