‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகையாக மிளிர்ந்தவர் சரண்யா துராடி. வெள்ளித்திரையில் இவர் நடித்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன், வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால், அந்த சீரியல்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின் சில மாதங்களாக வாய்ப்புகள் இன்றி தவித்த சரண்யா தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சரண்யாவின் இந்த கம்பேக் அவருக்கு இனியாவது கைகொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.