என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் |

சின்னத்திரையில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வேணு அர்விந்த். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியலும் அவர் நடிக்கும் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும். ‛அலைகள்' என்ற தொடரில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சில வருடங்களாக கோமாவில் இருந்தார். தற்போது பூரண நலம் பெற்று திரும்பி வந்துள்ள வேணு அர்விந்த் மீண்டும் ராதிகாவோடு ‛தாயம்மா குடும்பத்தார்' சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், அலைகள் சீரியலில் தான் மிகவும் கொடூரமாக நடித்திருந்ததாகவும் அப்போது பெண்கள் பலரும் என்னை பார்க்கும் போது மண்ணை வாரி தூற்றினார்கள். அதனால் கூட தனக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்கு பின் சீரியலில் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரங்கள் அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தனக்கு மிகவும் குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.