ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை காஜல் பசுபதி சின்னத்திரையில் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இனியா என்ற தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் தற்போது ஆல்யாவுக்கு வில்லியாக காஜல் பசுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். கடைசியாக ராதிகா சரத்குமாரின் அரசி தொடரில் நடித்திருந்த காஜல் பசுபதி 14 ஆண்டுகளுக்கு பின் சீரியலில் வில்லியாக கம்பேக் கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஜல் பசுபதி ஆல்யாவுக்கு எதிராக வில்லத்தனம் செய்யும் எபிசோடுகள் அண்மையில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. திறமையான நடிகையான காஜல் பசுபதிக்கு இந்த ரீ-என்ட்ரி தொடர்ந்து சீரியல் வாய்ப்புகளை பெற்றுத்தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.