'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த ரியாவை சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு திடீரென நீக்கிவிட்டனர். இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பதிவுகளில் 'இனி நான் சந்தியா இல்லை' என்று அறிவித்திருந்த ரியா, சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும் சில பேட்டிகளில் கூறியிருந்தார். இதனால் ரியா விஸ்வநாத் கேரியர் என்னவாகும்? அவர் தொடர்ந்து நடிப்பாரா? என ரசிகர்கள் ஐயமுற்றனர்.
இந்நிலையில், ரியா விஸ்வநாத் ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் 'சண்டைக்கோழி' தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஒரு சேனல் தன்னை சீரியலை விட்டு நீக்கிய சில நாட்களிலேயே மற்றொரு சேனலின் புது சீரியலில் ஹீரோயினாக கமிட்டாகி ரியா கெத்து காட்டியுள்ளார். இந்த மகிழ்ச்சியை ரியாவின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.