புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் நடித்து வந்தார். ஆர்யனும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகிய ஆர்யன், அதன்பிறகு அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆர்யன் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகும் 'மீனாட்சி பொண்ணுங்க' என்கிற தொடரில் ஆர்யன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்யனின் இந்த கம்பேக்கை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.