விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் நடித்து வந்தார். ஆர்யனும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகிய ஆர்யன், அதன்பிறகு அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆர்யன் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகும் 'மீனாட்சி பொண்ணுங்க' என்கிற தொடரில் ஆர்யன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்யனின் இந்த கம்பேக்கை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.




