ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் நடித்து வந்தார். ஆர்யனும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகிய ஆர்யன், அதன்பிறகு அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆர்யன் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகும் 'மீனாட்சி பொண்ணுங்க' என்கிற தொடரில் ஆர்யன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்யனின் இந்த கம்பேக்கை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.




