என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
வெள்ளித்திரை நடிகையான அபிதா, சின்னத்திரையிலும் 'திருமதி செல்வம்' தொடரின் மூலம் தடம் பதித்தார். பாலாவின் 'சேது' படத்தில் நடித்ததன் மூலம் அக்ரஹாரத்து அழகு தேவதையாக தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் பதிந்தார். இருப்பினும் தொடர்ந்து பெரிதாக படங்கள் எதுவும் நடிக்கவில்லை. இதற்கான காரணத்தை ரசிகர்கள் பலரும் முன்னரே எழுப்பி வந்தனர். அதற்கெல்லாம் அபிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அபிதா, ‛‛சேது படத்தில் நடனம் ஆடுவது போல ஒரு சீன் ஷூட் பண்ணாங்க. அதுல எனக்கு நடனம் ஆட வரல. இதனால், கோபமடைந்த பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில எல்லார் முன்னாடியும் திட்டினார். அதுக்கு அப்புறம் அம்மாக்கிட்ட இந்த படத்தில நடிக்கமாட்டேன்னு சொன்னேன். அப்புறம் சமாதானம் ஆகி மறுநாள் பாலாகிட்ட மன்னிப்பு கேட்டேன், அவரும் உங்க நல்லதுக்காக தான் சொன்னேன்னு சொன்னார். படம் வெளிய வர்றது வர எந்த படத்திலயும் நடிக்க வேண்டாம்னு சொன்னார். ஆனா, என்னோட சூழ்நிலைக்காக அடுத்து சில படங்கள் நடிச்சேன். இதனால் அவருக்கு கோபம் என நினைக்கிறேன். படத்தோட ரிலீஸ் அப்போ பிரஸ் மீட்டுக்கு கூட என்ன கூப்பிடல. சேது படத்துக்காக நானும் என்னோட கடின உழைப்ப கொடுத்திருக்கேன். அதன்பின் சினிமாவை விட சீரியல் தான் நமக்கு சரிபட்டு வரும் என்று சினிமாவ விட்டே ஒதுங்கிட்டேன்'' என கூறியுள்ளார்.