சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பழம்பெரும் நடிகரும், எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளருமான ஜஸ்டினின் மகள் பபிதா. பாக்யராஜின் ‛சின்ன வீடு' படத்தில் நடித்து பிரபலமானார். பவுனு பவுனுதான், பூவே பூச்சூடவா, மங்கை ஒரு கங்கை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் அதிமுகவில் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இப்போதும் அதிமுகவில்தான் இருக்கிறார்.
அவரது மகள் ஹரிஷ்தா தற்போது நடிக்க வந்திருக்கிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும், 'அழியாத கோலங்கள் 2' படத்தை இயக்கியவருமான எம்.ஆர்.பாரதி இயக்கும் 'ட்ரீம் கேர்ள்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜீவா என்ற புதுமுகம் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் 24 நாட்களில் நடந்து முடிந்திருக்கிறது.
படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாரதி கூறும்போது, “இது எளிமையான காதல் கதை. 4 கேரக்டர்கள் மட்டுமே படத்தில் இடம் பெறுகிறார்கள். நாயகனும், நாயகியும் தீவிரமாக காதலிப்பார்கள். அவர்களின் காதலுக்கு எதிரி அவர்கள் காணும் கனவுதான். அந்த கனவில் அவர்களுக்கு இன்னொரு காதல் வருகிறது. எது நிஜம், எது கனவு. எது சரி, எது தவறு என்று தவிப்பார்கள். முடிவு என்ன என்பதை சுவையாக சொல்லும் படம். படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதுதான் ஒரு நாள் நான் பபிதாவின் மகள் என்பதை என்னிடம் சொன்னார். நல்ல திறமையான நடிகையாக வலம் வருவார். என்றார்.