பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மி ஜெயராஜ். தொடர்ந்து ராஜபார்வை சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த ராஷ்மி, அந்த சீரியல் முடிந்த பின் ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு சீரியலில் மீண்டும் நடிக்காத ராஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஷ்மிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து கொண்ட ராஷ்மி ஜெயராஜ், அன்றைய தினத்தில் தனது கணவருக்காக சிறப்பு தந்தையர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ராஷ்மிக்கு அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.




