வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

விஜய் டிவி தொலைக்காட்சி நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்வை ஆண்டுதோறும் நடத்தி, சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று சிறப்பாக பணி புரிந்து வரும் கலைஞர்களுக்கு கெளரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி அன்மையில் நடைபெற்றது. இதில், சிறந்த வில்லனுக்கான விருதினை பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷ் குமார் பெற்றிருந்தார். பாக்கியலெட்சுமி கோபி என்று மட்டுமே அடையாளம் காணும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார் சதீஷ் குமார். சதீஷ் தனக்கு கிடைத்த இந்த விருதினை தனது தமிழாசிரியைக்கு சமர்பித்துள்ளார்.
இது தொடர்பில் வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'என் பக்கத்திலிருப்பது தமிழ் வாத்தியார், தமிழ்த்தாய், தமிழன்னை. நான் இவங்கள் அம்மான்னு தான் கூப்பிடுவேன். 9ஆம் வகுப்பில் என்னை மேடை ஏற்றி நடிக்க வச்சாங்க. இவங்க தான் விதை, இவங்க தான் நீர், இவங்க தான் நிலம். எனக்கு கிடைச்ச பாராட்டு, புகழ், விருதுகளோட மொத்த கிரெடிட்டும் இவங்களுக்கு தான். அவங்க இன்னைக்கு நான் உங்க முன்னாடி நடிகனா நிக்கிறேன்னா, இவங்க தான் காரணம். ' என நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
சதீஷ் குமார் தனது ஆசிரியை ஒரு அம்மா ஸ்தானத்தில் வைத்து பழகி வருவது அந்த வீடியோவை பார்க்கும் தெரிகிறது. சதீஷ் தனது ஆசிரியை மேல் வைத்திருக்கும் மரியாதை, பாசத்தை பார்க்கும் ரசிகர்கள் சதீஷின் இந்த குணாதிசயத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.




