படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித், ஸ்ரீநிதி மேனன், தர்ஷா குப்தா மற்றும் ப்ரியா ராமன் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தொடக்கத்தில் சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் போக போக போக அதன் சுவாரஸ்யம் குறைந்தது.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஒளிபரப்ப தொடங்கிய இந்த தொடர் டிஆர்பியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. எனவே, தொலைக்காட்சி நிறுவனம் செந்தூரப்பூவே தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு போட்டு முடித்து வைக்கவுள்ளதாகவும், அதே டைம் ஸ்லாட்டில் புதிய தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவால் அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ள 'சிப்பிக்குள் முத்து' என்கிற புதிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.