விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்று டைட்டில் பட்டம் வென்றார். அதன்பின் சில தினங்கள் கழித்து சில பேட்டிகளில் பேசிய ராஜூ, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ராஜூக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரசிகர்களும் ராஜூவை கத்தி கேரக்டரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அவர், 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி வந்த ராஜூ, பிக்பாஸ் வாய்ப்பினால் சீரியலை விட்டு விலகினார். ஆனால், அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு இதுவரை வேறு நடிகரை தேர்வு செய்யவில்லை.
தற்போது கதையில் ஐஸ்வர்யா திருமணத்தில் ஏராளமான ட்விஸ்டுகள் வரப்போவதாகவும், இறந்து போனதாக காட்டப்பட்ட முத்துராசு மீண்டும் வந்து ஐஸ்வர்யாவை மிரட்டும் வகையில் தொடரில் பல திருப்பங்கள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முத்துராசு கதாபாத்திரத்துடன் கத்தியும் திரும்ப வருவார் என்றும் கத்தி கேரக்டரில் ராஜூ தான் தொடரப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.