கண்மணி தொடரின் மூலம் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானவர் லீசா எக்லர்ஸ். மாடலிங் துறையிலிருந்து நடிக்க வந்த இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்த போது சீரியல் பக்கம் கவனம் திருப்பினார். கண்மணி தொடருக்கு பிறகு லீசா எக்லர்ஸ் சின்னத்திரையில் எந்த சீரியலிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெறவில்லை. அதே சமயம் வலைதளத்தில் புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். கலர்ஸ் தமிழ் சேனலில் அம்மன் சீசன் 3 என்ற புதிய தொடரில் லீசா எக்லர்ஸ் அம்மனாக நடிக்கிறார். அம்மன் 3 பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.