இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ராஜா ராணி 2. சந்தியாவின் கனவை நனவாக்க அவரது அண்ணன் சரவணனை உதவ சொல்லி சந்தியாவின் தந்தை கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து அண்ணன் தங்கை செண்டிமெண்ட் ட்ராக் புதிதாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சால்சா மணி சீரியலை விட்டு திடீரென விலகியுள்ளார்.
சால்சா மணி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அதேசமயம் சால்சா மணி நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி சித்தார்த் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். இவரும் நல்ல நடிகர் தான். தெய்வமகள் தொடரில் சுரேஷ் என்ற கதாபாத்திரத்திலும், மிஷ்கின் படங்களில் குறிப்பாக துப்பறிவாளன் படத்தில் சூப்பரான கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். சித்தார்த் வெங்கடேஷ் சரவணன் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது இனி அந்த கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.




