லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் வீட்டில் செல்ல கண்ணம்மாவாக வலம் வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் இருந்து ரோஷினி திடீரென விலகினார். இதற்கு காரணம் மிகச்சிறந்த இரண்டு வாய்ப்புகளை தவறவிட்ட ரோஷினி மூன்றாம் வாய்ப்பையும் தவறவிடக்கூடாது என்று நினைத்துதான் பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களில் கதாநாயகிகளின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'ஜெய்பீம்'. சார்பட்டா பரம்பரை படத்தில் துஷாரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரமும், ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்த செங்கேனி கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றன. அதுவரை தமிழில் இவர்கள் படங்கள் நடித்திருந்தாலும் கூட, இந்த படங்கள் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றன.
ஆனால், உண்மையில் இந்த இரண்டு வாய்ப்புகளும் நம் கண்ணம்மா ரோஷினிக்கு தான் முதலில் வந்துள்ளது. சீரியலில் கவனம் செலுத்தி நடித்தன் காரணமாக ரோஷினியால் இந்த இரண்டு வெற்றி படங்களிலும் நடிக்க முடியவில்லை. ஆனால், படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பின் மிகவும் வருந்தியுள்ளார். எனவே, தான் இனியும் வெள்ளித்திரை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என விடாமல் பிடித்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனால் தான் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து ரோஷினி விலகியுள்ளார். இந்த தகவலை பிரபல விஜய் டிவி இயக்குனர் பிரவீன் பென்னட் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.