லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
காதலித்து, திருமணம் செய்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டார் நடிகை சமந்தா. இவர்கள் பிரிவுக்கு சமந்தா குழந்தை பெற விரும்பாததே முக்கிய காரணம் என செய்தி பரவியது. அதை சமந்தா மறுத்தும் இருந்தார். மேலும் எந்த ஒரு தம்பதியர் விவகாரத்து என்று அறிவித்தால் உடனே தவறுகள் அனைத்தும் பெண்கள் செய்ததாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள சாகுந்தலம் படத்தை தயாரித்துள்ள நீலிமா குணா ஒரு பேட்டியில், ‛‛என் தந்தை குணசேகர் இந்த கதையை சமந்தாவிடம் கூறியபோது அவருக்கு கதை பிடித்து இருந்தது. ஆகஸ்ட்டிற்குள் படத்தை முடிக்கும்படியும், அதன்பின் அவர் குழந்தை பெற விரும்புவதாகவும் சொன்னார் என தெரிவித்துள்ளார்.