சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தெலுங்கு நடிகர் சங்கமான 'மா' சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். பிரகாஷ் ராஜ் தெலுங்கரல்ல, அவர் ஒரு கன்னடர் என ஆரம்பத்திலிருந்தே எதிரணியினர் அவரைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் தெலுங்கர் அல்லதான். கர்நாடகாவில் பிறந்தவன்தான் ஆனால், தெலுங்கு மாநிலங்களில்தான் நடிகராக வளர்ந்தவன். 9 நந்தி விருதுகள், 2 தேசிய விருதுகள் என்னிடம் உள்ளன. எதிரணியினரிடம் இத்தனை விருதுகள் உள்ளதா ?. தெலுங்கு மொழி பற்றி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். எதிரணியில் உள்ளவர்கள் இது குறித்து என்னுடன் போட்டி போட முடியுமா ?.,” என்றும் கேட்டுள்ளார்.
மேலும், “எதிரணியினர் தேவையில்லாமல் தெலுங்கு மாநிலங்களின் இரு முதல்வர்களையும் இந்தத் தேர்தலில் இழுக்கின்றனர். அவர்கள் இருவருமே மிகவும் பிஸியாக உள்ளனர். அவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களைத் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்,” என்றும் குற்றம் சாட்டுகிறார்.