நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிவித்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் இப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் அருண் மாதேஸ்வரன் ஏற்கெனவே 'ராக்கி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தரமணி படத்தில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'சாணிக் காயிதம்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ஏதோ ஒரு 'சம்பவம்' செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கொரோனா அலைகளைத் தாக்குப் பிடித்து தற்போது படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். “சாணிக் காயிதம்' படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அற்புதமான பயணம், நிறைய கற்றுக் கொண்டேன், நட்சத்திரங்களுக்கும், குழுவினருக்கும் நன்றி,” என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.