இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. மேலும் தனக்காகவும் ஒரு கதை தயார் செய்யுமாறு அந்த போன் காலில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் ஒரு கதையைக் கூறியுள்ளார் என்கிறார்கள்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி விஜய்யிடம் ஒரு படத்தின் கதையை கூறவே அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே ரஜினியை அடுத்து அவர் விஜயுடன் கூட்டணி அமைக்க அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கும் படம் தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.