டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
தற்போது ஹிந்தியில் குட்பை, மேடே, பிரமாஸ்திரா உள்பட பல படங்களில் நடித்து வரும் அமிதாப்பச்சன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நடித்து வந்த அமிதாப்பச்சன் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஓரளவுக்கு தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டார். இன்னும் சில காட்சிகள் பிறகு படமாக உள்ளது.
தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாம். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமிதாப்பச்சன், சைரா நரசிம்ம ரெட்டியில் ஒரு நீண்ட கதாபாத்திரத்தில் நடித்தவர், நாக் அஸ்வின் இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபாஸின் குருநாதர் வேடத்தில் நடிக்கிறாராம்.