நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

டிவி தொகுப்பாளினியான அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது படங்களிலும் நடிக்கிறார். டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இயங்கி வந்த இவர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில், ‛‛எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படும் பெண் நான். அதனால் என் மூளை கோபமாகி என் இதயத்தை விட அது வலிமையானது என காட்ட விரும்புகிறது. என் மண்டை ஓட்டில் மூளைக்கு அருகே செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கும் சூழல். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி மீண்டும் வருவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அர்ச்சனா தெரிவித்துள்ளார்.