அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இமான். ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், இப்போது கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடுகிறார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் தான் இவர்களை பாட வைக்கிறார் இமான். இதுப்பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இமான்.
தான் இசையமைத்த அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி சமூகவலைதளங்களில் பிரபலமானார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இவரது திறமையை பார்த்து ஜீவா நடிப்பில் தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட வாய்ப்பு அளித்தார் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.