டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இமான். ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், இப்போது கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடுகிறார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் தான் இவர்களை பாட வைக்கிறார் இமான். இதுப்பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இமான்.
தான் இசையமைத்த அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி சமூகவலைதளங்களில் பிரபலமானார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இவரது திறமையை பார்த்து ஜீவா நடிப்பில் தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட வாய்ப்பு அளித்தார் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.