ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் தியேட்டர்களில் படம் வெளிவந்த 100 நாட்களுக்குள் புதிய படங்களை டிவியில் ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. காலப்போக்கில் அந்த எதிர்ப்பு காணாமல் போனது. தங்களது படங்களின் சாட்டிலைட் உரிமை டிவிக்களில் நல்ல விலைக்கு விற்காதா என தயாரிப்பாளர்கள் காத்திருந்த காலம் வந்தது.
கடந்த வருடம் கொரோனா முதல் அலை காரணமாக ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியானது. அதற்கு ஒரு படி மேலே, புதிய படங்களை நேரடியாக டிவிக்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். அந்த விதத்தில் கடந்த வருட தீபாவளிக்கு பிரசன்னா, ஷாம், யோகி பாபு நடித்த 'நாங்க ரொம்ப பிஸி' படத்தை டிவியில் நேரடியாக வெளியிட்டார்கள்.
அதற்குப் பிறகு இந்த வருடத்தில், “புலிக்குத்தி பாண்டி, ஏலே, மண்டேலா, சர்பத், வணக்கம்டா மாப்ளே” ஆகிய படங்களை தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிவிக்களில் வெளியிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்ததாக 'வெள்ளை யானை' படம் வரும் ஜுலை 11ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒரு முன்னணி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மிகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டிவியில் நேரடியாக வெளியாகும் 8வது படம் இது.
கொரோனா அலை காரணமாகத்தான் கடந்த வருடம் முதல் டிவியில் படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். ஆனால், முதன் முதலாக 2008ம் ஆண்டு சேரன், நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து தேசிய விருது பெற்ற 'ஆடும் கூத்து' படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பானது.