புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா. தற்போது தெலுங்கில் எப் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இவருக்கும், பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா பிரச்னையால் திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்று மூன்று மாதத்திற்கு பிறகு பவ்யாவை பிரிவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மெஹ்ரீன் பிர்சடா.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது : நானும், பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்தாகிறது. எங்களின் திருமணமும் நடக்காது. இருவரின் நலன் கருதி இருவரும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இனி பவ்யா அவரது குடும்பத்தினர் எந்த தொடர்பும் இல்லை. இனி வழக்கமான என் பணிகளை தொடர்வேன். சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன். என் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.