இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காலா' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து டில்லியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையில் நிறுவும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவரின் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அவர் தனது உதவியை செய்து வருகிறார். ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகும் வரை மருத்துவ உதவிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து ஹூமா குரேஷி கூறும்போது: “எனது தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை.கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையை போல் நிலைமை மோசமாவது வரை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. டில்லியில் குழந்தைகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை உருவாக்கி வருகிறோம்” என்றார்.