சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு |
கொரோனா காலத்தில், தமிழ்நாட்டு நடிகைகள் அட்வைஸ் பண்ணி வீடியோ வெளியிடுவதோடு சரி. ஒரு சிலர் தான் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சிலர் உணவுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் நடிகைகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். போதை பொருள் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற ராகிணி, சஞ்சனா கல்ராணி கூட ரோட்டில் இறங்கி வேலை செய்கிறார்கள்.
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஏழைகளுக்கு உணவு அளித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளில் இறங்கியவர் பிரணிதா சுபாஷ். தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரணிதாவுக்கும் தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தனது திருமண பரிசாக தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் தடுப்பூசி முகாம் அமைத்து சொந்த செலவில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கினார். இந்த பணியை கணவருடன் இணைந்து தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.