சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சென்னை : சென்னையில் கார் பார்க்கிங் பிரச்னையால் நீதிபதி மகனுடன் கைகலப்பில் ஈடுபட்ட பிகபாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், கூகுள் குட்டப்பா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். சென்னை முகப்பேர் அருகே தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே டீக்கடை ஒன்று இருந்துள்ளது. இந்தக் கடையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, நேற்று இரவு, தன் தோழியுடன் டீ குடிப்பதற்காக, காரில் சென்றார்.
தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அப்போது, காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியுள்ளார். இதனால், அவருக்கும், ஐகோர்ட் நீதிபதியின் மகனுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில், நீதிபதியின் மகன் மற்றும் அந்தப் பெண் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஜெ.ஜெ., நகர் போலீஸ் ஸ்டேஷனில் நீதிபதி மகன் புகார் அளித்தார். நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இரு தரப்பு புகாரையும் ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதியின் மகன், அவரது தோழியை தாக்கியதாக பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.