இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருபவர்களுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு ஆலோசனை சொல்கிறார்.
“என் தோழி ஒருவர் என்னிடம் சொன்னதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயத்தில் அல்லது பணம் அல்லது அறிவு தருபவற்றில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். வேறு ஒன்றும் தேவையில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் தனது அழகான சிரிப்பு மூலம் பல ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடிப்பாரா என்று நம் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்துவது போலத் தெரிகிறது.




