தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு |

சிவகுமார், சத்யராஜ், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நாம் சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். தேவையில்லாமல் வெளியில் செல்லாதீர்கள். அப்படியே அவசியத்துக்காக சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். அதிலும் டபுள் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். நம் முடைய தமிழ்நாடு அரசாங்கம் சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்.
நான் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட் டுக்கொண்டேன். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். இதனை செய்து நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். கொரோனாவை வெல்வோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.




