மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! |
கொரோன 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதோடு, திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரையுலக பிரமுகர்களை அழைத்து ஆலோசனை செய்தார். இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்துவது, பெப்சி தொழிலாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது. இது முதல்வரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.