காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர், இப்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். சீக்கிரம் இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவேன்'' என தெரிவித்துள்ளார் அதர்வா.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாதவன், அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




