பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்நோய்க்கான லேசான அறிகுறி உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேப்போன்று நடிகர் மாதவன், அவரது குடும்பத்தார், தயாரிப்பாளர் சசிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு கூறுகையில், ‛‛எனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி, தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம். அவர் விரைந்து குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ‛‛4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு நெகடிவ் வந்துள்ளது. மீண்டும் இன்று(ஏப்., 12) பரிசோதனை செய்ய உள்ளேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு சென்னையில் பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மனைவிக்காக சுந்தர்.சியும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.