சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இந்நோயிலிருந்து குணமாகி உள்ளார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா கெட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இந்த தகவலை மகிழ்ச்சி உடன் டுவிட்டரில் பகிர்ந்து இருப்பவர், சட்டசபை தேர்தலில் தான் ஓட்டளித்ததையும் பதிவிட்டுள்ளார். மேலும் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.