எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே சில இடையூறுகள் ஏற்பட்டதால் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் அரசியல் பணிகளில் இறங்கி விட்டதால், தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து புதிய படவேலகளை தொடங்கினார் ஷங்கர்.
தற்போது ராம்சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படவேலைகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ள நிலையில், மீண்டும் ஷங்கர் படத்திலும் அவர்கள் இணைகிறார்கள்.
மேலும், இந்தியன்- படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அடுத்த படவேலைகளில் ஷங்கர் இறங்க வேண்டும் என்று அவருக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளது லைகா நிறுவனம். நீதிமன்றமோ ஷங்கரிடத்தில் விளக்கம் கேட்ட பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி விட்டது. ஆனால் இப்படி லைகா நிறுவனம் தடை கோரிவழக்குத் தொடர்ந்தபோது, அதுபற்றி கவலைப்படாமல் ராம்சரண் படவேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர்.