பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே சில இடையூறுகள் ஏற்பட்டதால் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் அரசியல் பணிகளில் இறங்கி விட்டதால், தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து புதிய படவேலகளை தொடங்கினார் ஷங்கர்.
தற்போது ராம்சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படவேலைகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ள நிலையில், மீண்டும் ஷங்கர் படத்திலும் அவர்கள் இணைகிறார்கள்.
மேலும், இந்தியன்- படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அடுத்த படவேலைகளில் ஷங்கர் இறங்க வேண்டும் என்று அவருக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளது லைகா நிறுவனம். நீதிமன்றமோ ஷங்கரிடத்தில் விளக்கம் கேட்ட பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி விட்டது. ஆனால் இப்படி லைகா நிறுவனம் தடை கோரிவழக்குத் தொடர்ந்தபோது, அதுபற்றி கவலைப்படாமல் ராம்சரண் படவேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர்.




