'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே சில இடையூறுகள் ஏற்பட்டதால் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் அரசியல் பணிகளில் இறங்கி விட்டதால், தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து புதிய படவேலகளை தொடங்கினார் ஷங்கர்.
தற்போது ராம்சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படவேலைகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ள நிலையில், மீண்டும் ஷங்கர் படத்திலும் அவர்கள் இணைகிறார்கள்.
மேலும், இந்தியன்- படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அடுத்த படவேலைகளில் ஷங்கர் இறங்க வேண்டும் என்று அவருக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளது லைகா நிறுவனம். நீதிமன்றமோ ஷங்கரிடத்தில் விளக்கம் கேட்ட பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி விட்டது. ஆனால் இப்படி லைகா நிறுவனம் தடை கோரிவழக்குத் தொடர்ந்தபோது, அதுபற்றி கவலைப்படாமல் ராம்சரண் படவேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர்.