டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியை சேர்ந்தவர். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். தனது பேச்சு திறன் மற்றும் டைமிங் காமெடி சென்சால் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் எளிய வாழ்க்கையை விரும்புகிறவராக இருக்கிறார். எளிய உடைகள் அணிவது, எல்லோரிடமும் எளிமையாக பழகுவது அவரது வழக்கமாக உள்ளது. "சினிமா நட்சத்திரத்தின் மகள் என்ற கிரீடம் இல்லாமல் என் மகள் மற்ற குழந்தைகளை போலவே இந்த உலகத்தை புரிந்து வளர வேண்டும்" என்று சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் டவுன் பஸ்சில் தனது மகளுடன் பயணம் செய்திருக்கிறார். அந்த பயணத்தில் அவர் மகளுக்கு சென்னையை சுற்றிக் காட்டியதோடு, அந்த பகுதியில் என்ன மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவரது பஸ் பயணத்தை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது இப்போது வைரலாக பரவி வருகிறது.




