காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சலார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரை அடுத்த கோலார் தங்கவயலில் நடத்த திட்டமிட்டனர். அதற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கருதி அனுமதி அளிக்கவில்லை.
இதனால் படப்பிடிப்பை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோதாவரிகணியில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலும், அதை சுற்றியுள்ள காடுகளிலும் படப்பிடிப்பபை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதி நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் அச்சுறுத்தலால் இங்கு இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்ததில்லை.
தற்போது சலார் படத்தின் படப்பிடிப்புக்கு நக்சலைட்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானா காடுகளை வணிக நோக்கத்திற்காக எடுக்கப்படும் சினிமாவுக்கு பயன்படுத்த அனுமதிக் க மாட்டோம். வெளியேறுங்கள் என நக்சலைட்டுகள் படத் தயாரிப்பு தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரபாஸ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் ராமகுண்டம் நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கேட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் 40 ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.




