காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சாஹோ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இதில் ராதே ஷ்யாம் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.. ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் தாண்டி விட்டது. இந்தநிலையில் தற்போது பிரபாஸின் இன்னொரு படமான 'சலார்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பு கோதாவரிக்கரையில் நடைபெற்றது. முதல்நாளே ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் சூட்டோடு சூடாக, பிரபாஸ் படப்பிடிப்பில் பங்கேற்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு மிக அருகில் நின்று பிரபாஸை வீடியோ எடுத்துள்ளதால், தற்போது யூனிட்டில் உள்ளவர்களிடமும் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.




