கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் |
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தீரன் சின்னமலை. அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க இயக்குனர் ஸ்ரீராம் முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க நடிகர் சிபிராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சினிமா நடிகரான சிபிராஜ் மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இதுகுறித்து சிபிராஜ் கூறுகையில், "இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஒரு மிகச்சிறந்த வீரர். அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதுவும் நாடகத்தில் நடிப்பது என்பது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்.
சினிமாவில் நடிக்கும் பொழுது ஏதாவது தவறு செய்துவிட்டால் மறுபடியும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது டப்பிங்கில் சரிசெய்துவிடலாம். ஆனால் மேடை நாடகத்தில் அப்படி எல்லாம் சரி செய்து விட முடியாது. எனவே இது எனது வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
எம்ஜிஆர், சிவாஜி, எனது தந்தை சத்யராஜ் உட்பட பெரிய நடிகர்கள் பலர் மேடை நாடகத்தில் இருந்துதான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது நடிகர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது முற்றிலும் குறைந்து விட்டது. இதை உணர்ந்துதான் மேடை நாடகத்தில் நடிக்க சம்மதிக்கிறேன்" என சிபிராஜ் கூறியுள்ளார்.